பூனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஆன்டிவைரஸ் மருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியாக பயன்படும்…!

பூனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஆன்டிவைரஸ் மருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியாக பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது.இந்த நிலையில் பூனைகளில் உண்டாகும் ஒரு கொடிய வைரஸ் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

SARS-CoV-2 என்ற மருந்து கொரோனா நோயை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்றும், எனவே ஒரு சிறந்த கொரோனா தடுப்பூசியாக இருக்கும் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பேராசிரியர் ஜோன் லெமியூக்ஸ் கூறியுள்ளார். இந்த மருந்து உடலின் சில புரோட்டீஸ் மூலக்கூறுகளின் தடுப்பானாகும். மேலும் இந்த மருந்து உயர் இரத்த அழுத்தம் முதல் புற்றுநோய் மற்றும் எச்ஐவி வரை அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைக்கு பயன்படுகிறது. முதல் இந்த மருந்து SARS என்ற தொற்றுநோய்க்காக 2002-2003 -ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கால்நடை ஆராய்ச்சியாளர்களால் புரோட்டீஸ் தடுப்பானை மீண்டும் உருவாக்கி அது பூனைகளில் உண்டாகும் ஆபத்தான ஒரு நோயை குணப்படுத்தியது.

எனவே புரோட்டீஸ் தடுப்பான் மேலும் பல பயனுள்ள மருந்துகளை உருவாக்க உதவும் என்றும் விஞ்ஞானிகள் மருந்துக்கான சாதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ்க்கான எதிரான தடுப்பூசியாக இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகளை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு மருந்து பரிசோதனைக்கு செல்ல, அதனை ஆய்வகத்தில் உறுதி செய்த பின்னர் விலங்குகளில் சோதனை செய்ய வேண்டும். ஆனால் இந்த மருந்து ஏற்கனவே பூனைகளுக்கு பயன்படுத்தி நச்சுத்தன்மை இல்லாதது என்று உறுதி செய்ததால் அடுத்து கட்டத்திற்கு செல்வதாக லெமியூக்ஸின் கூறியுள்ளார்.