சுர்ஜித்தை மீட்க ஐஐடியில் இருந்து மற்றொரு குழு வருகை..!

சுர்ஜித்தை மீட்க ஐஐடியில் இருந்து மற்றொரு குழு வருகை..!

திருச்சி அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தை 8 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தையை மீட்க ஐஐடியில் இருந்து மேலும் ஒரு குழு வருகை தந்துள்ளது. ஐஐடி குழுவினர் கொண்டு வந்த நவீன சாதனங்கள் மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் ஐஐடி தொழில்நுட்பக் குழுவினர் குழந்தை மீட்பதற்கு அடுத்தகட்ட முயற்சி குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube