சீனாவில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம். கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.
இன்று உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் முதலில் ஆரம்பமானது. இந்த வைரஸானது, அந்நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது. மேலும் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது தான் இந்த வைரசின் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு, அந்நாட்டு மக்கள் மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து, அந்த நாட்டை அடுத்ததாக அச்சுறுத்தும் விதத்தில், யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சீன புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்ததுள்ளது.
யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கிய நிலையில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…