துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் ..!

ஆடவர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.

டெல்லியில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கத்தை தட்டி சென்றது. ஆடவர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதற்கு முன், நேற்று முன்தினம் உலகக் கோப்பை சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் பன்வார் தியான்ஸ் சிங் இணைந்து தங்கப்பதங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan