கோவையில் இன்று மேலும் ஒரு யானை உயிரிழப்பு..! 8 மாதங்களில் 17 யானைகள் உயிரிழப்பு.!

கோவை போளுவாம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை உடல் நலக்குறைவால் சோர்வடைந்து நடக்கமுடியாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவக்குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி மருத்துவ சிகிக்சை கொடுத்தனர்.

கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்   யானை சிகிக்சை பெற்று வந்தது. இந்நிலையில், இன்று  சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை உயிரிழந்தது. கோவையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பித்ததக்கது.

author avatar
murugan