வீட்டை முற்றுகையிடுவதாக அறிவிப்பு .! ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பு

  • நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
  • இதனால் ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றது.இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் வீட்டை முற்றுகையிடப்படும் என்று அறிவித்தனர்.இதனால் சென்னை போயாஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.