தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் பதவி ஏற்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை  பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில்  திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில்  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் வரும் 22ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.