பாஜகவுக்கு புயல் வேகத்தில் உயிரூட்டிக் கொண்டிருப்பவர் அண்ணாமலை – க.பாண்டியராஜன்

பாஜக என்றாலே ஒரு மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கும் காலத்தில், ஒரு புயல் வேகத்தில் அந்த கட்சிக்கு உயிரூட்டி கொடுப்பவர் அண்ணாமலை.

அதிமுக முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், பாஜக என்றாலே ஒரு மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கும் காலத்தில், ஒரு புயல் வேகத்தில் அந்த கட்சிக்கு உயிரூட்டி கொடுப்பவர் அண்ணாமலை என்றும், என்னுடைய கல்லூரி கால இளவல் அந்த அன்பு சகோதரர் அண்ணாமலை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.