அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்.

அண்ணா பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக இருப்பவர் சூரப்பா. இவருக்கு வீரப்பன் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், சூரப்பா அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை துணைவேந்தர் சூரப்பா திரும்பப் பெறக் கோரி அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.