கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 7.50 கோடியை கொடுத்துள்ள ஏஞ்சலினா ஜூலி!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி பசியால் துடித்து வருகின்றனர் என ஹாலிவுட் பிரபலமான ஏஞ்சலினா ஜூலி குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 7.50 கோடி நிதி வழங்கி உள்ளார்.

நோ கிட் ஹங்கிரி என்ற அமைப்பிடம் இந்த நிவாரண உதவியை கொடுத்துள்ள ஏஞ்சலினா பள்ளிகளில் உணவு சாப்பிட்டுவிட்டு தற்பொழுது உணவின்றி தவிக்கின்ற குழந்தைகளுக்கு இந்த உதவி தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Rebekal