ஆண்ட்ரே ரஸ்ஸல் நான்காவதாக இறங்க வேண்டும்.. கவுதம் கம்பீர்…!

கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடி 512 ரன்கள் விளாசினார் மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மட்டும் கிட்டத்தட்ட 204.81 ஆக இருந்தது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து பந்து வீச்சிலும் 13 விக்கெட்டுகளை எடுத்து அனைத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்தார், மேலும் இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அவர் மீது எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில் ஆண்ட்ரே ரஸலிற்கு சவாலாக இருப்பவர்கள் 3 பவுலர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். குறிப்பாக ஆண்ட்ரே ரஸலிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை சமாளிப்பது மிகவும் கடினம். என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய கவுதம் கம்பீர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐந்தாவது ஆறாவது ஆளாக இறங்க கூடாது, நான்காவது ஆளாக இறங்கவேண்டும் அப்பொழுதான் மிகவும் அதிரடியாக விளையாடுவர் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.