தமிழக கோவில்களை சுற்றி வரும் ஆந்திரா அமைச்சர் ரோஜா.! நேற்று திருச்செந்தூர் தரிசனம்.!

திருச்செந்தூர் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். 

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆளும் ஓ.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்ஏவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா தமிழக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

நேற்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த அவர், முருகன் கோவிலில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். அதே போல சில ஓரிரு நாட்கள் முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.