ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கைது!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. நிறுவனருமான ஒய்.எஸ்.சர்மிளா தெலுங்கானாவில் பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இன்று டிஆர்எஸ் தொண்டர்களால் அவரது கேரவனை தாக்கி எரித்ததாக, கட்சி தொண்டர்கள் கூறியதையடுத்து வாரங்கல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாரங்கல் மாவட்டத்தில் ஒய்.எஸ்.சர்மிளாவின் பாதயாத்திரையின் போது இந்த மோதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. பாரத ராஷ்டிர சமிதியுடன் தொடர்புடையவர்கள் பாதயாத்திரையின் போது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தியதாகவும், பேருந்தை எரித்ததாகக் கூறி தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஒய்.எஸ்.சர்மிளாவின் பாதயாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசார், சென்னராபேட்டா மண்டலத்தில் அவருடன் வந்த YSRTP தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

ஒய்எஸ்ஆர்டிபி கட்சியினர் கைதுகளை எதிர்த்து காவல்துறை மற்றும் டிஆர்எஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, டிஆர்எஸ் எம்எல்ஏ பி.சுதர்சன் ரெட்டி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

தன் பேருந்தைத் தாக்கியவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, தன்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளார். சர்மிளா ‘பிரஜா பிரஸ்தானம்’ பாதயாத்திரையின் போது ஓய்வெடுக்கப் பயன்படுத்தும் பேருந்து, ஆளும் டிஆர்எஸ் கட்சியினரால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாக YSRTP குற்றம் சாட்டியுள்ளது. ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி தலைவர்களின் கார்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது. வாரங்கல் மாவட்டம் சென்னராப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட லிங்ககிரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சி தலைவர் ஷர்மிளாவின் 223-வது நாள் பாதயாத்திரையில் இன்று பங்கேற்று கொண்டிருந்தபோது, டிஆர்எஸ் ஆதரவு கோஷங்களை எழுப்பியும், கே.சி.ஆரை வாழ்த்தியும் ஒரு குழுவினர், கேரவன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்து தீ வைத்து கொளுத்தியதாகவும் தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment