ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்! காவலர்களுக்கு அறை, சிசிடிவி கேமிரா என பணிகள் தீவிரம்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்! காவலர்களுக்கு அறை, சிசிடிவி கேமிரா என பணிகள் தீவிரம்!

அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல சந்திர பாபு நாயுடு மகனுக்கு மாவோயிஸ்ட் மிரட்டல், செம்மரகடத்தல் கும்பல்களின் மிரட்டல் இருந்ததால் கொடுக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வந்த ஆந்திர அரசு அரசாணைபடி, ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் காவலர்களுக்கு அறை, கழிப்பிடம், சிசிடிவி அறை என சுமார் 24 லட்சத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube