மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார் அன்புமணி

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.இந்த கூட்டணியில் பாஜக ,பாமக,புதிய தமிழகம்,தேமுதிக ,புதிய நீதிக்கட்சி ,தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான  கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது.

தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்,அதிமுக கூட்டணியில் உள்ள பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக விற்கு வழங்கப்பட்டது.

இன்று  பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.