Breaking:சற்று முன்…பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி அவர்கள்,கடந்த 25 ஆண்டுகளாக  இருந்து வந்த நிலையில்,அவர் தனது பதவியை நிறைவு செய்ததையடுத்து பாராட்டு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில்,பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் திருவேற்காட்டில் நடைபெற்று வரும் நிலையில்,பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த  2006 ஆம் ஆண்டு முதல் பாமகவில் இளைஞரணி தலைவராக இருந்து வந்த நிலையில்,தற்போது கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து,நிகழ்ச்சி மேடையில் தனது தந்தையிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பாமக கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Comment