எழும்பூரில் அன்புமணி ராமதாஸ்…!!! உள்பட 500 பேர் கைது…!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண் டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் நடந்தது.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது

போராட்டக்காரர்கள் நிலையத்தில் நுழையாமல் தடுக்க தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்ற டாக்டர் அன்புமணி, மின்சார ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தார். பா.ம.க. தொண்டர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசாருக்கும், தொண்டர் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ரெயில் மறியலில் ஈடுபட்ட டாக்டர் அன்புமணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment