சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு…! பாம்பு பிடிப்பவர்கள் எண்களை வெளியிட்டது மாநகராட்சி…!

சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

சென்னை : தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

 இந்நிலையில், ஒருவார காலமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.