கொரோனா பாதிப்பில் முதலிடம்.! இன்று முதல் கூடுதலாக 2 மணி நேரம் தளர்வு.!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,121 ஆக உள்ளது.

மகாராஷ்டிராவில் தற்போது கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று முதல் கடைகள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கடைகளில் கூட்டத்தை குறைக்க கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்து வைத்திருக்கலாம். மும்பை , புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ், நாசிக், துலே, ஜல்காவ், அகோலா, அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில்  உள்ள கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்பட வேண்டும்.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கடைகள்  7 நாட்களும் திறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan