மஹாராஷ்டிராவில் நடந்த விபத்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலிருந்து அஹமதாபாத் செல்லும் வழியில் டிரக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த டிச-2 அன்று திருமணத்திற்கு சென்றுவிட்டு தனது குடும்பத்துடன் மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது கிராமப்பகுதியான தானிவாரி வழியே செல்லும்போது கார் அவர்களது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் மீது மோதியதில், காரிலிருந்த 80 வயது முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்காக இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தை பற்றி உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment