தலைமறைவாக இருக்கும் அம்ரித்பால் சிங்; அடைக்கலம் கொடுத்தவர் கைது.!

வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங், தலைமறைவாக இருக்க உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலிஸ்தானி ஆதரவாளரும், வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங், பஞ்சாபிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், கடைசியாக ஹரியானாவின் குருஷேத்திரத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தலைமையகம்) சுக்செயின் சிங் கில் தெரிவித்தார்.

அம்ரித்பால் சிங் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர், குருக்ஷேத்ராவின் ஷஹபாத் மார்கண்டாவில் இருந்து குடையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சியை பஞ்சாப் போலீசார் பகிர்ந்துள்ளனர். இந்த வழக்கின் தற்போதைய நிலையில், அம்ரித்பால் சிங் தலைமறைவாக இருப்பதற்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், பல்ஜித் கவுர் என்ற 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த பெண், பஞ்சாபி மற்றும் ஹரியானா காவல்துறையின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் பல்ஜித் கவுர், அம்ரித்பால் சிங், உத்தரகாண்டிற்கு தப்பிச் செல்லும் திட்டத்தை தான் கேட்டதாக தன்னை விசாரித்த அதிகாரிகளிடம் கூறியுள்ளார். தற்போது அம்ரித்பால் சிங் எங்கு சென்றிருப்பார் என்பது குறித்து பல்ஜித் கவுரின் மொபைலை விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

author avatar
Muthu Kumar

Leave a Comment