அமமுக சார்பில் மார்ச் 3-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெற தேதியை அனைத்து கட்சிகளும் அறிவித்து வரும் நிலையில், அமமுக சார்பில் விருப்ப மனு பெற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற மார்ச் 3-ஆம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 10-ஆம் தேதி புதன்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கீழே குறிப்பிட்டுள்ளபடி விருப்பமனு கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை ரூ.10,000, புதுச்சேரியில் விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை ரூ.5,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…