#AmitabhBachchan கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பினார்.!

தற்போது நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் சோதனை முடிவில் நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடந்த பாலிவுட் நடிகர் ஆகிய அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பேத்திக்கும் இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டு அனைவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அன்மையில்  ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் நன்றியுடன் நேட்டிவ் என்று பரிசோதித்து பின் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று இவரது மகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தற்போது  அமிதாப் பச்சன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், பாபுஜியின் ஆசீர்வாதம், அன்பான நண்பர்கள் ரசிகர்களின் பிரார்த்தனைகள் மற்றும் நானாவதி மருத்துவமனை சிறந்த கவனிப்பு  எனக்கு உதவியது ரண்டு குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.