மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன் உ.பி.யைப் பாருங்கள்: என்று அமித்ஷாவுக்கு திரிணமுல் காங் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அமித்ஷா கருத்து தெரிவிப்பதற்கு முன் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலையை ஆய்வு விட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.
தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அமித்ஷா பேட்டி அளி்த்தார். அப்போது அவர் மே.வங்கத்தின் நிலை குறித்து கடுமயைாக விமர்சித்தார்.
அந்த பேட்டியில் அமித்ஷா அம்பான் புயலில் அனைத்து நிவாண உதவிகளும் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றது. மேலும் உணவு தானியங்களை மக்களுக்கு விநியோகம் செய்ததில் ஏராளமான ஊழல் நடந்ததாக புகார்கள் வந்தது.
ஒட்டுமொத்த நிவாரணப் பணிகளிலும் ஊழல் நடந்ததாகவும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மே.வங்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அமித்ஷா ஊழல் உச்ச கட்டத்தில் உள்ளது.
அங்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து விட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தொழிற்சாலை ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தால் கொல்லப்படும் அவலம், பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது இவ்வாறு எல்லாம் மற்ற மாநிலங்களில் நடக்கவில்லை.
ஒருநேரத்தில் கேரளாவில் நடந்தது.ஆனால் அங்கு தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மே.வ ஏப்ரல், மே மாதத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பார்த்து, பாஜக அல்லது எந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவரும் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்வது இயல்பானது.
களச்சூழலுக்கு ஏற்ப, அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டுத்தான் நாங்கள் கடமையாற்றுகிறோம் என்று அம்த்ஷா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
உள்துறை அமைச்சரின் விமர்சனத்திற்கு உ.பியில் சட்டம் ஒழுங்கே இல்லை என்று அமித்ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
அமித்ஷாவின் குற்றசாட்டிகு பதிலடி கொடுக்கும் விதத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் எம்.பி டெரீக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமித் ஷா உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது. விரைவாக அவர் குணமடைந்து வர வேண்டும்.
அரசியல் கொலைகள் அதிகரித்து உள்ளதாக அமித்ஷா குற்றம்சாட்டினார் ஆனால் பாஜகவோ வேண்டுமென்றே காசநோய், புற்றுநோயில் இறந்தவர்களைக் கூட அரசியல் கொலைப்பட்டியலில் சேர்ப்பித்து அதனை அதிகரித்து காட்டுகிறது.
அரசியல் கொலைகள் குறித்து பேசுகின்ற அமித்ஷா, மேற்குவங்கத்தில் பாஜகவில் நடக்கும் மோதல்கள்,கொலைப்பற்றியும் பேசுவாரா? மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கிற்கும் தற்போதுள்ள நிலையையும் அமித்ஷா ஆய்வு செய்ய வேண்டும்.
மாநிலத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைப்படுத்த திரிணமூல் காங்கிரஸ் கடுமையைாக செயல்பட்டு வருகிறது.மே.வ சட்ட ஒழுங்கை பேசும் முன் குஜராத், உத்தரப்பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை சற்று உற்றுநோக்க வேண்டும்.
அரசியல் கொலைகள் காரணம் குறித்து அமித்ஷாவுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று கடுமையாக அறிக்கையில் விமர்சித்துள்ளார்.