பிரதமர் மோடியை தொடர்ந்து, அமித்ஷாவையும் நேரில் சந்தித்தார் மம்தா பேனர்ஜி!

பிரதமர் மோடியை தொடர்ந்து, அமித்ஷாவையும் நேரில் சந்தித்தார் மம்தா பேனர்ஜி!

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்த பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.

தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த மோடியும், மம்தாவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இருவருக்குள் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்காளத்தின் பெயரை பங்களா என மாற்றக்கோரியும், மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்க சென்றதாகவும் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்தால் அவரை பார்க்கவேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தற்போது மம்தா பேனர்ஜி நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube