900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு ஒப்புதல்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மற்றும் வணிகங்களுக்கு நீண்டகாலமாக ஊக்கமளிக்கும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கான 900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு  அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகிலேயயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் அமெரிக்கா தான்.இதன் விளைவாக பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.மேலும் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை விகிதம் தொடர்ந்து அங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.இதனால்  பொருளாதார பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மற்றும் வணிகங்களுக்கு நீண்டகாலமாக ஊக்கமளிக்கும் வகையில் தான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கான 900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு  அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.ஆகவே வேலை வாய்ப்பை இழந்த அமெரிக்கர்களுக்கு நிவாரண தொகையாக வழங்கப்படும்.ஆகவே இது தொடர்பான ஒப்புதலுக்காக அதிபர் டிரம்பிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று  தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.