ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அமர்நாத் யாத்திரை தாமதமாகி உள்ளதோடு, அதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதுக்களை தவிர, 55 வயதுக்கு குறைவான யாத்ரீகளும் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைவருக்கும் எல்லையிலேயே சோதனை நடத்தப்படும் என்றும், வைரஸ் தொற்று இல்லை என்று சான்று இருந்தால் மட்டுமே, குகை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.