காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் அம்ரீந்தர் சிங் ….!

ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் அவர்கள் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை நியமித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் 18 ஆம் தேதி நவ்ஜோத் சிங் சித்து உடன் அம்ரீந்தர் சிங்கிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே இவர் தற்பொழுது தனது பஞ்சாப் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் பெயரில் தான் புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் எனவும் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

author avatar
Rebekal