ரஜினி விரும்பவில்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கிறார்கள் – தமிழருவி மணியன்!

ரஜினி விரும்பவில்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கிறார்கள் – தமிழருவி மணியன்!

ரஜினி கட்சி துவங்கிய பின் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாலும், மக்கள் அவரை வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கிறார்கள் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

பல காலங்களாக ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்றினை நேற்று தனது டுவிட்டர் வழியாக ரஜினி தெரிவித்தார். அதாவது ஜனவரியில் அவர் கட்சி துவங்க உள்ளதாகவும் அது குறித்த திகதியை டிசம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒருவரையும் மேற்பொறுப்பாளராக தமிழருவி மணியனையும் நேற்று நியமித்து அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினி கட்சி துவங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube