கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர், சிதம்பரம் புறவழிச்சாலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முக ஸ்டாலின், தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆகி உள்ளார் என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். இன்னும் சொன்னால் அதிமுகவினருக்கே அந்த வருத்தம் இருக்கிறது என்று கூறியுள்ளார். சொந்த கட்சியை சேர்த்தவர்களே மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி. தோல்வி பயம் முதல்வர் பழனிசாமிக்கு வந்துவிட்டது.
ஆட்சி அவரது கையில் இருந்து நழுவ போகிறது, அதனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் முதல்வர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சுருட்ட வேண்டியது அனைத்தையும் சுருட்டி விட்டார் என்றும் அவருக்கு ஆட்சி கிடைக்க போவது இல்லை என உறுதி அளித்துள்ளார் முக ஸ்டாலின். திமுக கையில் தான் ஆட்சி வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தலைவர் கருணாநிதி இன்றைக்கு நம்முடன் இல்லை, அவர் இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு அத்தனையும் நம்முடன் குணத்தில் இருக்கிறது. அவரால்உருவாக்கப்பட்டிருப்பவன் நான்.ஆட்சியை பார்த்துவிட்டுதான் கண்மூட வேண்டும் என்று கலைஞரிடம்எண்ணம் இருந்தது. ஆனால், வாய்ப்பைஅவருக்கு வழங்காமல் போய்விட்டோம் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…