மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் – மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம்

மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களிடம் ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால் மட்டுமே டிசி தரமுடியும் என நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் தர முடியும் என நிர்பந்திக்க கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.