அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் ! இது தவறான வாக்குறுதிகளில் ஒன்று -ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி எப்போது  கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள உங்களது மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.இதனிடையே பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவை எப்படி அணுகுவது என்ற உத்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள்.கொரோனா தடுப்பூசிகளை பதுக்கும் வகையில், தவறான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.