கூட்டணி சிதறாமல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்-திருமாவளவன்

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது? என்றும்  உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்  என்று திமுகவின் கே.என்.நேரு பேசினார்.இவரது பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறிவா என்றும் கேள்வி எழுந்தது.
சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,நாடு, தமிழக மக்களின் நலனுக்காக இதே கூட்டணி சிதறாமல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.