தாம் பேசும் கருத்துக்கள் அனைத்தும் தமது சொந்த கருத்துக்கள்.! ராகவா லாரன்ஸ் விளக்கம்.!

  • தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.
  • நான் பேசியதற்கும், பேசப்போவதற்கும் ரஜினிகாந்த் காரணமில்லை, நான் பேசும் கருத்துக்கள் அனைத்தும் என்னோடைய சொந்த கருத்துக்கள் என்றும் கூறினார்.

சென்னையில் கடந்த நாட்களுக்கு முன்பு தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பேசும் கருத்துக்கள் அனைத்தும் என்னோடைய சொந்த கருத்துக்கள் என்றும், அதற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் சொல்லியே நான் பேசுவதாக சிலர் சொல்லி வருவது உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள லாரன்ஸ். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக் கூடிய நபர் ரஜினி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல என்றும், நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், நான் பேசியதற்கும், பேசப்போவதற்கும் ரஜினிகாந்த் காரணமில்லை என, நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்