நாட்டின் எல்லா முயற்சிகளும் அமைதியை அடிப்படையாகக் கொண்டவை – மோடி

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக்கில் ஏற்பட்ட சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டி காட்டி உள்ளது என்று கூறினார். நாட்டின் எல்லா முயற்சிகளும் அமைதியை அடிப்படையாக கொண்டவை என்ற அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆழ்கடல் கேபிள் திட்டம் மூலம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேசிய மாணவர் படைக்கு முப்படைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி, நாட்டுக்காக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தனது வீர வணக்கத்தை தெரிவிப்பதாக கூறினார். மேலும், இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்