ஆர்பரிக்கும் அலங்கநல்லூர்…சிறந்த காளை(யர்)களுக்கு முதல்வர்-துணைமுதல்வர் பரிசு-அறிவிப்பு

  • ஆர்பரிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலகல கொண்டாட்டம்
  • வெற்றிப்பெறும் காளை மற்றும் காளையர்களுக்கு முதல்வர் துணைமுதல்வர் கார் பரிசு 

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காளைகளும் காளையர்களும் சரிநிகராக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டும்.அவ்வாறு இந்தாண்டு சிறப்பு பரிசாக கார் வழங்கப்பட உள்ளது.இந்த பரிசு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha