ஹவுதி புரட்சிப்படை தளபதி அல் ஹம்ரான் கொல்லப்பட்டார்.!

ஹவுதி புரட்சிப்படை தளபதி அல் ஹம்ரான் கொல்லப்பட்டார்.!

ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்த அல் ஹம்ரான் கொல்லப்பட்டதாக ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏமன் அரசங்கத்தை ஆதரித்து சவுதி தலைமையிலான போர் விமானங்கள் ஹவுதிகள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரும்பாலான ஹவுதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மரிப் மற்றும் அல்-பேடா மத்திய மாதங்களுக்கு இடையே போற நடைபெற்றது. இந்த போரில் அல் ஹம்ரான் கொல்லப்பட்டார் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல் ஹம்ரான் ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்து வந்துள்ளார். இவர் ஹவுதி தலைவராக அறியப்படும் அப்துல் மாலிக் அல் ஹவுதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இந்தாண்டு கொல்லப்பட்ட மிக பெரிய போர் படை தளபதி அல் ஹம்ரான் தான் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube