கடற்கரையில் நடந்த சோதனையில் ஆகாஷ் ஏவுகணை வெற்றி..!

இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் டிஆர்டிஓ ஆகாஷ்-என்ஜி (New Generation) ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒடிசாவில் நடைபெற்றது.

ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து, ஆகாஷ்-என்ஜி ஏவுகணை தரையில் இருந்து வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

author avatar
murugan