பிரமாண்ட இயக்குனர் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித்..? வெளியான சூப்பர் தகவல்.!
பிரமாண்ட இயக்குனர் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித்..? வெளியான சூப்பர் தகவல்.!
நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ak62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், நடிகர் அஜித் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் “RC15” திரைப்படத்தில் தான் அவருக்கு வில்லனாக அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்த பேச்சு வார்த்தை முடிந்து அஜித்குமார் சம்மதம் தெரிவித்துவிட்டால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த RC15 திரைப்படத்தில் அஞ்சலி.கியாரா அத்வாணி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து அஜித்தும் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளதாக பரவும் தகவல் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு செல்லவுள்ளார். இந்த பயணத்திற்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.