பொன்னியின் செல்வனை அடுத்து ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாக உள்ள அடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படம்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக ராவணன், எந்திரன் படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களை அடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை அடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளாராம். சிரஞ்சீவி தற்போது சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.