மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் ஆய்வு

கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர்.அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய நிதிக்குழுவும் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.