இறந்தவர்களின் பட்டியலில் அதிமுக பெண் வேட்பாளர் பெயர்..!

நாகை நகராட்சி அதிமுக பெண் வேட்பாளர் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அந்த பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அதிமுக சார்பில்  அமிர்தவள்ளி( 33) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்க நாகை நகராட்சி அலுவலகத்திற்கு  வந்தார்.

அப்போது அவருடைய பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை வழங்க முடியாது என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி தான் உயிரோடு இருக்கும்போது  எப்படி எனது பெயர் இறந்தவர்களின்பட்டியலில் இடம்பெற்றது? யார் காரணம்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என தெரிவித்தார்.

 

author avatar
Castro Murugan