சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று  அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னெடுத்து தேர்தலை சந்திப்போம்.அதிமுகவின் சாதனையை சொன்னாலே   இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் .அரசின் திட்டங்களை    மக்களிடம் எளிமையாக ஜெயலலிதா கொண்டு சென்றார். தற்போது காலகட்டத்தில் மக்களிடம் சாதனைகளை   கொண்டு சேர்ப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளது.மேலும் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திமுக தற்போது தரைதட்டிய கப்பலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.