கே.சி.பழனிசாமி வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக மனு!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அதிமுக மனு.

கேசி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உரிய விதிகளை பின்பற்றி தான் அவரை நீக்கியுள்ளோம். தன்னை நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதனால் அடிப்படை உறுப்பினராக இல்லாத அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி கேசி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். இதனிடையே, அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கேசி பழனிசாமி ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது. எனவே, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆகியோர் அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்