+2 தேர்வு.., அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு..!

நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளகிறார். 

இன்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடன்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளி மூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார். இந்நிலையில்,  +2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற உள்ள சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளகிறார்.

author avatar
murugan