உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை – ராமதாஸ் விமர்சனம்!

உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தகவல்.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக பாமக கட்சியின் உயர்நிலை கூட்டம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டிடுவதாக அக்கட்சி தலைவர் ஜி.கே மணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் ஜிகே மணி நேற்று மாலை அறிவித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், கடந்த தேர்தல்களின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதிமுகவில் சரியான தலைமை இல்லை என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள் தனித்து போட்டியிட்டனர். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர்களை வாபஸ் வாங்க வைக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

சொந்த கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? என்றும் கூறியுள்ளார். அதிமுகவோடு தற்போது கூட்டணி வைத்தால் பாமகவுக்கு உரிய இடம் கிடைக்காது.  அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். பாமகவால் கூட்டணி கட்சிகள் பலனடைந்தது. கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் பணிகளில் அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பை தரவில்லை என பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் வந்தன என்றும் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

2 mins ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

11 mins ago

மங்காத்தா படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?

Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…

26 mins ago

டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை.!

Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…

37 mins ago

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…

57 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

1 hour ago