அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பயணம்:
இந்நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள்,கோவை சென்று அங்கிருந்து இரவு விமானம் மூலம் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,அவருடன் தங்கமணி,எஸ்பி வேலுமணி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.
பிதமரை சந்திப்பு:
இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும்,இந்த சந்திப்பின்போது,தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் அவர் முறையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும்,அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாதிப்பார் எனவும் தகவல் வெளியானது.
வழக்கு:
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது,இதனால், திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில்,கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை ஆளுநரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுத்துள்ளார். இதற்கிடையில்,வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான்,அதிமுக தலைமை டெல்லி சென்றுள்ளது. ஏனெனில்,2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக -பாஜக கூட்டணி தற்போது வரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…