நவீன காலத்திற்கேற்ப வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார்

நவீன காலத்திற்கேற்ப வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார்

நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார்

எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கு என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியதை குறித்த கேள்விக்கும் பதில் அளித்த அமைச்சர், எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும், கோட்டையில் தேசிய கொடிதான் பறக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அந்தந்த கட்சி தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது என்றும் அவர்களுடைய கட்சி கொடியை தூக்கிப்பிடிக்கத்தான் தலைவராக நியமித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube