அகரம் தான் என் அடையாளம்! நடிகர் சூர்யாவின் தந்தை அதிரடி!

  • நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன்.
  • “அகரம்” தான் சூர்யாவின் அடையாளம்.

சென்னையில், நடிகர் சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை” துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், சகோதரர் கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது பேசிய அவர், நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன் என்று உறுதியளித்துள்ளார். குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் நடிகர் சூர்யா அவர்களின் தந்தை அவர்கள் கூறுகையில்,  இன்னும் 100 படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், “அகரம்” தான் சூர்யாவின் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.