அடேங்கப்பா…’ஸ்டீவ் ஜாப்ஸ்’ கையெழுத்திட்ட காசோலை எவ்வளவு ஏலம் போனது தெரியுமா..?

ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ‘$175 காசோலை’ ஏலத்தில் ₹88 லட்சத்துக்கு  பெறப்பட்டது.

1976 ஆம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் வார்த்தைகள் இன்றும் பலருக்கும் மோட்டிவேஷன் என்று கூட கூறலாம்.  அவர் மறைவதற்கு முன்,  புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்வுகளில் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.

இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன்பு கையெழுத்திட்ட $175 காசோலை ஒன்று  தற்போது $106,985-க்கு ஏலம் போனது.  இந்திய மதிப்பின் படி, (கிட்டததட்ட ₹88 லட்சம்) ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் க்ராம்ப்டன், ரெம்கே & மில்லர் என்ற நிர்வாக ஆலோசனை நிறுவனத்திற்கு இந்த  காசோலை செலுத்தப்பட்டது.

1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவிற்கு நிறுவனம் மாற்றப்படுவதற்கு முன்பான வரையில் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்  முதல் அதிகாரப்பூர்வ முகவரியையும் இது குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.